சட்டவிரோத மீன்பிடி - 27 பேர் கைது
புனாடி கொக்குதுடுவாய் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மீன்பிடி நடவடிக்கையில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை இதனை தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மீனவர்களிடம் இருந்து 5 மீன்பிடி இயந்திரங்கள் உட்பட மேலும் சில உபகரணங்கள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.