
கோழி இறைச்சி மற்றும் கடலுணவுகளில் கொரோனா தொற்று
கோழி இறைச்சி மற்றும் கடலுணவுகளில் கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேஸில் நாட்டிலிருந்து சீனாவின் சென்சன் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பது சீன அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு கோழி இறைச்சி பெற்றுக்கொண்டதன் பின்னர் அவற்றை பரிசோதனை செய்த சீன அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதேபோல ஈக்குவாடோரிலிருந்து சீனாவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடலுணவுகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.