
மாபெரும் இராணுவ படைகளுடன் போர் பயிற்சி: ராஜதந்திரமாக வேலையை காட்டும் சீனா!
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள்.
இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சீனாவின் முன்னணி இராணுவப் பிரிவான பிஎல்ஏ இராணுவப் படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய சீனாவில் இருந்து லடாக் எல்லைக்கு எவ்வளவு வேகத்தில் படைகளை அனுப்பலாம் என்பதை ஆராயவும், படைகள் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் சீனா இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.