தென் கொரியாவில் வேலையின்மை 10 ஆண்டுகளில் முதன்முறையாக உயர்வு

தென் கொரியாவில் வேலையின்மை 10 ஆண்டுகளில் முதன்முறையாக உயர்வு

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தென் கொரியாவில் வேலையின்மை 10 ஆண்டுகளில் முதன்முறையாக உயர்ந்துள்ளது.

மே மாதத்தில், விகிதம் 4.5% ஆக அதிகரித்துள்ளது என்றும் இது ஏப்ரல் மாதத்தில் 3.8% ஆக இருந்தது என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக வேலையின்மை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் மாதத்திலிருந்து OECD தரவு, உறுப்பு நாடுகளில் சராசரி வேலையின்மை 8.4% ஆகக் காட்டுகிறது. இதில் அமெரிக்காவிலேயே அதிக எண்ணிக்கையிலானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன.