அசாமில் கடந்த 24 மணிநேரத்தில் 1,057 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு

அசாமில் கடந்த 24 மணிநேரத்தில் 1,057 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு

அசாமில் கடந்த 24 மணிநேரத்தில் 1,057 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 8பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  ‘புதிதாக 1,057 பேர்  கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 75,558ஆக அதிகரித்துள்ளது.

இதில் 22,087 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 53,286ஆக உள்ளது.

மேலும்கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 182ஆக அதிகரித்துள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.