கொரோனா தொற்றுக்கு மத்தியில் தென்னாபிரிக்காவில் முடக்க கட்டுப்பாடுகள் தளர்வு – ஜனாதிபதி

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தென்னாபிரிக்காவில் முடக்க கட்டுப்பாடுகள் தளர்வு – ஜனாதிபதி

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் முடக்க கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.

இதேவேளை மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றின் விற்பனை மீதான தடை நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டுக்குள் பிரயாணங்களை மேற்கொள்ளுதல், குறைந்தளவிலான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய ரமபோசா, கட்டுப்பாடுகளை தளர்த்துவது நாட்டிற்கு பெரும் கஷ்டங்களுக்கு பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவும் என்றார்.

“நம்பிக்கையின் அறிகுறிகள்” இருந்தபோதிலும், கொரோனா தொற்றுக்கு எதிராக தென்னாபிரிக்கர்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆபிரிக்காவின் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த நாட்டில் பதிவாகியுள்ளன, 570,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளும் 11,500 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.