
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பயணியொருவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்த நிலையில் குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து இந்தியா வருகை தந்த எயார் இந்தியா விமானம் தரையிரங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 16 பேர் சம்ப இடத்தியிலேயே உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.