சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொவிட்-19 உலக பரவல் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொவிட்-19 மரணங்கள் 50 ஆயிரத்தைக் கடந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 941 மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 921 ஆக உயர்வடைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக அதிகளவான உயழரிழப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், 533 மரணங்கள் பதிவான நிலையில், அமெரிக்காவில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்கள் பதிவான நாடாக பிரேஸில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 775 உயிரிழப்புகள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8 ஆயிரத்த 654 ஆக உயர்வடைந்துள்ளது.

மூன்றாவது இடத்தில் பதிவாகியிருக்கும் மெக்ஸிக்கொவில் கடந்த 24 மணிநேரத்தில் 214 மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.