கேரளாவில் இன்று மேலும் 1,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று மேலும் 1,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று மேலும் 1,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கேரளாவில் இன்று மேலும் 1,968 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52,199 ஆக உயர்ந்துள்ளது.

 


இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது

மேலும் மாநிலத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 1,217  பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,828 ஆக உள்ளது. தற்போது வரை 18,123 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.