
பிள்ளைகளுக்கும் விசம் கொடுத்து தாமும் விசம் அருந்திய பெற்றோர்
சுப்பிரமணி என்பவருக்கு 40 வயதாகின்றது, அவரின் மனைவியின் பெயர் மேனகா - 38 வயதாகிறது.
இருவருக்கும் பூஜா மற்று நவீன் என இரு பிள்ளைகள்.
சுப்பிரமணியம் தறித்தொழில் செய்து தனது குடும்பத்தினை பராமரித்து வந்த நிலையில் தொழிலை விருத்தி செய்வதற்காக பல லட்சம் ரூபா தவணைக்கடனை பெற்றுக்கொண்டுள்ளார்.
தனி நபர் ஒருவரிடம் இவ்வாறு கடனை பெற்ற சுப்பிரமணி குறித்த தொகையை தனது தொழிலில் விருத்திக்காக செலவழித்துள்ளார்.
சுப்பிரமணி பல லட்சம் ரூபாவினை மூலதனமாக இட்டு தொழிலை ஆரம்பித்த நேரம் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து நிறுவனங்களையும் மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார்.
தொழில் வீழ்ச்சி கண்டது. அனைத்து மூலதனத்தையும் இழந்து விட்டார் சுப்பிரமணி.
கடனை கொடுத்த நபர் பணத்தை மீள தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அது மாத்திரமின்றி சுப்பிரமணி அவமானப்படும் வகையில் வீட்டிற்கே வருகை தந்து நிந்தித்துள்ளார்.
அவமானம் தாங்க முடியாத சுப்பிரமணி, கிருமிநாசினியை சோற்றில் கலந்து தனது இரு பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு தனது மனைவியான மேனகாவும் தானும் சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டு சிறிது நேரத்திலேயே சுப்பிரமணி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் இவ்வுலகை விட்டு பிரிந்தனர்.
உயிருக்காக பிள்ளைகள் இருவரும் போராடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென வீட்டிற்கு வருகை தந்த ஒருவர் அவர்கள் இருவரையும் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
குறித்த இருவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடன் கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு இறந்தவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவின் திருச்செங்கோட்டையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.