கொரோனா வைரஸ் எந்தவொரு வடிவத்திலும் நம்மிடயே உயிர்வாழக் கூடும்- மருத்துவ நிபுணர்கள் குழு

கொரோனா வைரஸ் எந்தவொரு வடிவத்திலும் நம்மிடயே உயிர்வாழக் கூடும்- மருத்துவ நிபுணர்கள் குழு

கொரோனா வைரஸ் தொற்றானது எந்தவொரு வடிவிலேனும் நம்மிடயே உயிர்வாழக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

எனவே, கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு தவறாமல் வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளதாக பிரித்தானியா அரசாங்கத்தின் அவசர சேவைகள் தொடர்பிலான அறிவியல் ஆலோசனைக்குழுவின் பிரதானி சேர் மாக் வல்போட் தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்னில் உருவான காய்ச்சல் போன்று அல்லாமல் கொவிட் 19 வைரஸ் பரவலை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், 1918ஆம் ஆண்டு ஸ்பெய்னில் காய்ச்சல் தொற்று காணப்பட்டதை விட தற்போது கொரோனா தொற்று வேகமான பரவி வருவதாக பிரித்தானிய ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனில் நிச்சயம் தடுப்பூசி திட்டம் அவசியம் எனவும் குறித்த குடு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொரோனா தடுப்பூசி தட்டம்மை தடுப்பூசி போன்று வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்காததால் அவ்வப்போது கொடுக்க வேண்டியிருக்கும் என்று பிரித்தானிய மருத்துவ ஆலோசனைக் குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.