விபத்தில் சிக்கிய விமானம்: எழுவர் பலி
விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 7பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஐ.நா. உணவு நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சரக்கு விமானம் தெற்கு சூடான் தலைநகரில் சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளகியுள்ளது.
இதனால் விமானத்தில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்தும் உள்ளதாக தென் சூடானின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
விபத்தின் போது விமானத்தில் 5 பயணிகளும் மூன்று பணியாளர்களும் இருந்ததாக அந் நாட்டு போக்குவரத்து அமைச்சர் மதுத் பியார் யெல் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜூபாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமானம் கமேரு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகளில் மட்டும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பியுள்ளார்.