
பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா -பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்
பிரித்தானியாவில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறைக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 30க்கும் மேற்பட்டோர் கூடும் வகையில் சட்டவிரோதமாக நடத்தப்படும் விருந்துகளை ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்களுக்கு பொலிசார் 10,000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கலாம். அதேபோன்று விருந்தில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு 100 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம், ஒவ்வொரு குற்றத்திற்கும் 3,200 பவுண்ட் வரை இரட்டிப்பாகும்.
பொது போக்குவரத்து அல்லது கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற கட்டாய முகக்கவம் அணிய வேண்டிய இடங்களில் விதிகளை மீறுபவர்களுக்கு இந்த அபராதம் பொருந்தும்.
சனிக்கிழமை இரவு 70 க்கும் மேற்பட்ட உரிமம் பெறாத தெரு மற்றும் வீட்டு விருந்துகளில் கலந்து கொண்டதாக பர்மிங்காம் நகரில் பொலிசார் கூறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.