
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை நெருங்கியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (வியாழக்கிழமை) புதிய உச்சமாக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்படி 75 ஆயிரத்து 995 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33 இலட்சத்து 7 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் ஆயிரத்து 17 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 25 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7 இலட்சத்து 23 ஆயிரம் பேர் தொடந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.