
கொவிட்-19 தொற்றின் சிவப்பு மண்டலமாக பரிஸ் நகரத்தை பெயரிட்டது பெல்ஜியம்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின், சிவப்பு மண்டலமாக பிரான்ஸ் தலைநகர் பரிஸை பெல்ஜியம் பெயரிட்டுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸிலிருந்து வருபவர்களை 14 நாள் தனிமைப்படுத்துவதாக அறிவித்ததற்கு மத்தியில், பெல்ஜியம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
பிரான்ஸிலிருந்து, முக்கியமாக பரிஸிலிருந்து, நாடு திரும்புபவர்களிற்கும், இங்கிருந்து பெல்ஜியம் செல்பவர்களிற்கும் கட்டாயக் கொரோனாப் பரிசோதனையும், தனிமைப்படுத்தலும் செய்யப்பபோவதாகவும் பெல்ஜியம் அறிவித்துள்ளது.
பரிஸ் நகரத்துடன், சீயன் செயிண்ட் டெனிஸ், வால் டி மார்னே, சர்தே, ஹேரால்ட், ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ், பூச்ஸ்-டு-ரோன், கயேன் ஃபிராங்காயிஸ், மயோட் ஆகிய இடங்கலிருந்து வருபவர்களிற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் எனவும் பெல்ஜியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிரான்சின் இல் து பிரான்ஸ் மாகாணத்தை கொரோனா ஆபத்து வலையமாக ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.