
காச நோயாளிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு அறிவிப்பு!
அனைத்து காசநோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காச நோய் குறித்த பரிசோதனைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு காசநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டாலும் காசநோய்க்கான சிகிச்சையை நிறுத்தாமல் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருமல், காய்ச்சல், எடை இழப்பு, இரவு நேர வியர்த்தல், காசநோயாளிகளுடன் தொடர்பில் இருத்தல் வரலாறு கொண்டவர்களுக்கு மார்பு எக்ஸ்ரே, வெளிப்படையான அணு அமில பெருக்க சோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.