பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!

பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!

இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த 21 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் உதவி இயக்குனர் வைத்திய கலாநிதி அனுராதா பாஸ்கரன் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலசுப்பிரமணியனின் உடல் உடற்பயிற்சி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.