
இன்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும் பிரித்தானியா மற்றும் லெபனானில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 993 ஆக உயர்வடைந்துள்ளதுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.