
தமிழகத்தில் இன்று 6,352 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது
இதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் தமிழகத்தில் கொவிட் 19 தொற்றால் இன்று 87 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கமைய அங்கு கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்ககை 7 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் தமிழகத்தில் கொவிட் 19 தொற்றுறுதியான 6 ஆயிரத்து 45 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய அங்கு கொவிட் 19 தொற்றிலிருந்து இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியான 52 ஆயிரத்து 726 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.