
சர்வதேச ரீதியில் 2 கோடியே 50 இலட்சத்தைக் கடந்துள்ள கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை
சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 50 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 51 இலட்சத்து 53 ஆயிரத்து 553 ஆக உயர்வடைந்துள்ளது.
8 இலட்சத்து 45 ஆயிரத்து 925 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு கோடியே 74 இலட்சத்து 91 ஆயிரத்து 310 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
கொவிட்-19 காரணமாக அதிக பாதிப்பை அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது.
61 இலட்சத்து 38 ஆயிரத்து 748 பேருக்கு அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவதாக பிரேஸிலில் 38 இலட்சத்து 46 ஆயிரத்து 965 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 35 இலட்சத்து 39 ஆயிரத்த 712 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 63 ஆயிரத்த 657 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின்போது, 300 போராட்டக்காரர்களை பெர்லின் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சுமார் 38 ஆயிரம் பேர் நகர வீதிகளில் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், போராட்டக்காரர்கள், கற்களையும், போத்தல்களையும் வீசியதாக குற்றம் சுமத்தியுள்ள அதிகாரிகள், பெருமளவானோரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் 2 இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 9 ஆயிரத்து 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேநேரம், 2 இலட்சத்து 17 ஆயிரம் பேரளவில் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.