
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துயரம்! 29 பேர் பலி
னாவின் ஷான்க்சி மாகாணத்தின் லின்பென் எனும் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்ற ஈரடுக்கு விடுதி திடீரென இடிந்து விழுந்ததில் 29 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் 29 பேர் பலியாகி உள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை 57 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சீன அவசரநிலை மேலாண் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 100இற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் சென்றுள்ளதுடன், இயந்திரங்கள் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.