
டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இன்று 2024 பேர் பாதிப்பு, 22 பேர் பலி
இந்தியாவில் தொடக்கக் காலத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. டெல்லி மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்தது.
ஆயித்திற்குக்கீழ் எண்ணிக்கை வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று 2,024 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய பாதிப்புடன் மொத்தம் 1,73,390 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,54,171 பேர் குணமடைந்துள்ளனர். 14,793 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4426 பேர் உயிரிழந்துள்ளனர்.