
உலகிலேயே ஒரே நாளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 79,457 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 960 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா தொற்றால் உலகிலேயே ஒரு நாளில் அதிக பாதிப்பு மற்றும் அதிக மரணத்தை சந்தித்த நாடாக இந்தியா மாறி உள்ளது.
எந்த நாட்டிலும் இல்லாத அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,457 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,619,169 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,617ஆ உயர்ந்துள்ளது.
மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,383,993ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850,588ஆகவும் உள்ளமை குறப்பிடத்தக்கது.