கொரோனா பாதிப்பு : இந்திய அளவில் ஆந்திர மாநிலத்திற்கு இரண்டாம் இடம்!

கொரோனா பாதிப்பு : இந்திய அளவில் ஆந்திர மாநிலத்திற்கு இரண்டாம் இடம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 24 ஆயிரத்து 767 ஆக அதிகரித்து அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை  7 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  மகாராஷ்டிரா முதலாம் இடத்திலும்,  4 இலட்சத்து 22 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.