ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய ரணில் விக்ரமசிங்க..!
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த நிலையில் ரணில் விக்ரம சிங்க சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் நான்கு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதோடு, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 2 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.