
இதுவரை 8 லட்சத்து 46 ஆயிரம் பேர் மரணம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியாக இந்த தொற்றுக்கு உள்ளானவர்ளின் எண்ணிக்கையில் இது 25 சத வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கணிப்பிற்கு அமைய 2 கோடியே 50 லட்சம் தொற்றுக்கு உள்ளானவர்களில் 8 லட்சத்து 46 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக நுரையீரல் இயந்திரத்தின் ஊடாக சிகிச்சை பெற்று வந்த 62 வயதான சீனர் ஒருவர் பூரண சுகம் அடைந்துள்ளார்.
தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொற்றின் தாக்கம் கவலைக்கிடமான தன்மையை அடைந்த நிலையில், இயந்திரத்தின் ஊடான விசேட சிகிச்சை கடந்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டு தற்போது சுகமடைந்துள்ளார்.
இந்த சிகிச்சைக்கு பெரிய தொகை நிதி செலவிடப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை,கிரேக்கித்திலிருந்து வேல்ஸ்க்கு சென்ற விமான பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏழு பயணிகள் இந்த தொற்றிற்கு உள்ளானதாக அந்த நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் பயணித்த 193 பயணிகள் மற்றும் பணியாளர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.