
பட்டம்விடும் திருவிழாவில் நிகழ்ந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் -அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்
தாய்வானின் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு வானில் பறந்த சம்பவம் பட்ட திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பதைபதைப்புக்கு ஆளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தாய்வானின் நானிலியோ பகுதியில் பட்டம் விடும் விழா நடைபெற்றது. இதில் பறந்த ராட்சத பட்டத்தின் வாலில் அங்கு நின்றுகொண்டிருந்த மூன்று வயது சிறுமி சிக்கி பட்டத்தின் வால் மேலெழும்ப, அவளும் வானை நோக்கி சென்றாள்.