இத்தாலியில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது!

இத்தாலியில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது!

இத்தாலியில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, கடந்த 6 நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.

இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 996பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

வாரந்தோறும் கொவிட்-19 பரவலை கண்காணித்து வருவதன் எதிரொலியாக, மாதத்தின் நான்காவது வாரத்தில் அதிக அளவிலாக கொவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 20.8 சதவீதத்தினர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை இரண்டு இலட்சத்து 69ஆயிரத்து 214பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 35ஆயிரத்து 483பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை 26ஆயிரத்து 78பேர் வைரஸ் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 94பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், இரண்டு இலட்சத்து 7ஆயிரத்து 653பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.