
சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்
20 ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் வரைவு சட்டமா அதிபரின் மீளாய்விற்காக அந்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சின் செயலாளரினால் 20 ஆம் திருத்த சட்டமூலத்தின் வரைவு சட்டமா அதிபரின் மீளாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.