
47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
இந்தியா முழுவதும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொளி தொடர்பாடல் மூலம் விருதுகளை வழங்கிவைத்துள்ளார்.
ஆசிரியர் தினமான இன்று (சனிக்கிழமை) நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதன்படி, இன்று விருதுபெற்ற 47 ஆசிரியர்களில் 18 பேர் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.