சர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது...!

சர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது...!

கொரோனா இரண்டாவது கட்டத்தை அடையப்போகின்றது என தகவல்கள் வெளியானமையை தொடர்ந்து சர்வதேச பங்குசந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீளெழுச்சி பெற செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்தமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டிருந்த சில நாடுகள் வழமைக்கு திரும்பியதை தொடர்ந்து பங்கு சந்தை வளர்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இரண்டாம் கட்டத்தை கொரோனா அடைந்துள்ளது என வெளியான தகவலை தொடர்ந்து  மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.