அதிகரிக்கும் கொரோனா தொற்றால் அவதிப்படும் பிரித்தானியா

அதிகரிக்கும் கொரோனா தொற்றால் அவதிப்படும் பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கின்றது என அந்த நாட்டு சுகாதாரத்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் வரும் நாட்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கு முடக்க நிலை உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுதொடர்பிலான கடும் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது

இதன்காரணமாக பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா வைரஸ்; தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக இங்கிலாந்தின் சுகாதாரதுறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவில் மாத்திரம் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 50 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அங்கு 41 ஆயிரத்து 554 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.