கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஜெனீவா:

 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்தை கடந்துள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 70 லட்சத்து 9 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 337 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

 

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்து 406 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரத்து 493 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

 

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

 

அமெரிக்கா - 37,58,618

பிரேசில் - 33,55,564

இந்தியா - 31,80,865

ரஷியா - 8,43,277

தென் ஆப்ரிக்கா - 5,66,555

கொலம்பியா - 5,29,279

பெரு - 5,15,039

மெக்சிகோ - 4,42,268