தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

கொவிட்-19 காரணமாக தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம், 89 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் 5 ஆயிரத்து 776 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் வைரஸ் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 75 ஆயிரத்து 29 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் 6 ஆயிரத்து 599 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி, தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 43 லட்சத்து 70 ஆயிரத்து 128 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 73 ஆயிரத்து 923 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்தியாவில் கொவிட் 19 தொற்றிலிருந்து 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணடைந்துள்ளனர்.