
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 11.54 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 43 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 73,890 பேர் உயிரிழந்துள்ளனர். 33.98 லட்சம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5.18 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 5,18,04,677 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,54,549 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.