“EPF ”மிகுதியை இனி குறுஞ்செய்தி ஊடாகப் பார்க்கலாம்

“EPF ”மிகுதியை இனி குறுஞ்செய்தி ஊடாகப் பார்க்கலாம்

ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய மிகுதியையும், அது தொடர்பான தகவல்களையும், தத்தமது கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவலாக, மாதம் தோறும் அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில் திணைக்கள ஆணையாளர் ஏ. விமலவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் அடிப்படையில், தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய இருப்பு தொடர்பான தகவல்களை, மாதாந்தம் தத்தமது கையடக்கத் தொலைபேசிக்கு, குறுந்தகவலாக அனுப்பும் வேலைத்திட்டத்திற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.“பி” அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும் ஊழியர் சேமலாப நிதியை இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.