
அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
காடழிப்பு, விலங்கு வேட்டை மற்றும் பொறி வைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்காக 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு குறித்த தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சீ.பி ரத்நாயக்கவின் பணிப்புரைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆணைவிழுந்தான் வனப்பகுதி இறால் வளர்ப்புக்காக அழிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 பேர் அடங்கிய குழுவின் அறிக்கை, வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கவால் நேற்று நாடாளுமன்றத்தில் சபை படுத்தப்பட்டது.
அந்த அறிக்கையிலேயே வனப்பகுதி அழிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய வன அழிப்புடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதி இறால் வளர்ப்புக்காக இயந்திரம் ஒன்றின் மூலம் அழிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அதற்கான ஆலோசனை வழங்கிய வர்த்தகரும் இயந்திர சாரதியும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.