இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 11.29 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைள் தற்போது இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று மட்டும் 11.29 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.29 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தியாவில் இதுவரை 44 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.