சற்று முன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா..!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3152 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3147 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த 05 பேரும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2955 ஆக காணப்படுகின்றது.
அதேபோல், இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 என்பதும் குறிப்பிடத்தக்கது.