
வடகொரிய அதிபரை புகழ்ந்துரைத்த ட்ரம்ப்
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தான் நினைத்ததை விட கில்லாடியாக இருந்ததாகவும் பல முக்கிய விடயங்களை தன்னுடன் மனம் திறந்து பேசியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாக அந்நாட்டு புத்தகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான பாப் உட்வார்ட் என்பவரால் எழுதப்பட்ட ரேஜ் எனும் புத்தகத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்த போது அவர் பகிர்ந்து கொண்ட பல விஷயங்களையும் தொகுத்து எழுதியுள்ளார்.
குறித்த புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கிம் ஜோங் உன் தனக்கு எதிராக செயல்பட்ட மாமாவிற்கு மரண தண்டனை கொடுத்து சுட்டுக் கொன்றது எப்படி என்பதை மிகவும் விளக்கமாக ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட கொரியா போன்ற நாடுகளின் சவால்களை முறியடிக்கும் வகையில் அணு ஆயுத அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும்,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இதற்கு முன் கேள்விப்பட்டிராத ஒரு ஆயுதமாக இது இருக்கும் என்றும் ட்ரம்ப் அவரிடம் தெரிவித்தார் என அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.