
இத்தாலியை உலுக்கிய கொடூரக் கொலை! அஞ்சலியில் ஆயிரக்கணக்கானோர்......
இத்தாலியில் கறுப்பின இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோமின் புறநகர் பகுதியான கோலிபுரோ நகரைச் சேர்ந்த வில்லி மான்டீரோ துதர்தே எனும் (21 வயது) கறுப்பின இளைஞனை வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அடித்து கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு பிரதமர் கியூசப் காண்டே உட்பட அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பிரதமர் மற்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக 04 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.