பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தவர்களுக்கு முச்சக்கரவண்டியால் நேர்ந்த கதி

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தவர்களுக்கு முச்சக்கரவண்டியால் நேர்ந்த கதி

நுவரெலியா - ஹட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (13) விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

சம்வத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும், பேருந்துக்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நால்வருமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த அனைவரும் சிகிச்கைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து தரிப்பிடத்தில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.