பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டம் இன்று முதல் அமுலில்

பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டம் இன்று முதல் அமுலில்

இன்று (14) முதல் கொழும்பு நகரின் முக்கிய வீதிகளில் பேருந்து ஒழுங்கை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கான “நெடுஞ்சாலை ஒழுக்கத்தின் மறுதொடக்கம்” ஒத்திகை திட்டத்தில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இதன்படி, காலிவீதி, ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர முதல் கோட்டே வரையான வீதிகளில் பேருந்து ஒழுங்கை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

01 ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, பொல்தூவ சந்தியிலிருந்து ஹோர்டன் பிளேஸ், ஹோர்டன் சுற்றுவட்டம் வரை

02 பேஸ்லைன் வீதி, களனி பாலம் தொடக்கம் ஹைலெவல் சந்தி வரையான வீதி

03 ஹைலெவல் வீதி, அனுலா கல்லூரிக்கு அருகே ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை, தும்முல்ல சுற்றுவட்டம், தர்ஸ்டன் வீதி, மாக்ஸ் பெர்ணான்டோ மாவத்தை, புஸ்தகால சந்தி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, மல்பார சந்தி, பித்தளை சந்தி வரை

ஆகிய வீதிகளிலேயே குறித்த பேருந்து ஒழுங்கை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பிலான ஒத்திகை நிகழ்வொன்று பொரள்ளை, ராஜகிரிய, தெமடகொட ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.