
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள “நியூ டயமன்ட்” கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்டி நியூ டயமன்ட் கப்பலின் கேப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து குற்றப் புலனாய்வு பிரிவு கடந்த (12) அறிக்கையொன்றை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் பதிவு செய்த அறிக்கையை இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.