
மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1880ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையில் நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 673 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1196ஆக காணப்படுவதோடு இலங்கையில் இதுவரையில் குறித்த தொற்றின் காரணமாக 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.