ஸ்ரீலங்கா மண்ணை பயன்படுத்த முடியாது! எச்சரிக்கையாக இருக்குமாறு வெளிவிவகார செயலாளர் அறிவுறுத்து

ஸ்ரீலங்கா மண்ணை பயன்படுத்த முடியாது! எச்சரிக்கையாக இருக்குமாறு வெளிவிவகார செயலாளர் அறிவுறுத்து

இன்னொரு நாட்டுக்கு எதிராக ஸ்ரீலங்கா மண்ணை பயன்படுத்துவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என வெளிவிவகார செயலாளர் ஜயநாத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக சவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறித்த ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர்,

ஒருநாட்டில் மாற்றம் பெறக்கூடிய பல விடயங்கள் உள்ளன. அது ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கைகளை மாற்றலாம். ஆனால் நாட்டின் அமைவிடத்தினை அதனால் மாற்ற முடியாது.

ஸ்ரீலங்காவின் அமைவிடத்தின் முக்கியம் காரணமாக இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள முக்கிய நாடுகளுக்கு ஸ்ரீலங்கா மிகவும் கவரும் தன்மையை கொண்டதாக காணப்படுகின்றது.

ஆனால் இந்த கவரும் தன்மையுடன் பல சவால்களும் உருவாகின்றன. இந்த சாதகதன்மையையும் சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஸ்ரீலங்கா மக்களுக்கு அரசியல் பொருளாதார இராஜதந்திர ரீதியில் நன்மையளிக்கும் வகையில் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு கடுமையாக பாடுபடவேண்டும்.

மூலோபாய நலன்கள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. உலகில் அனைத்து விடயங்களும் மாற்றமடையலாம். இதன் காரணமாகவே ஜனாதிபதி ஸ்ரீலங்கா பக்கச்சார்பற்ற அணிசேரா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணும் நாடாகவிளங்கவேண்டும் என விரும்புகின்றார்.

இன்னொரு நாட்டுக்கு எதிரான ஸ்ரீலங்கா மண்ணை பயன்படுத்துவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ஏனென்றால் நாங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை புரிந்துகொள்ளவேண்டும். ஸ்ரீலங்கா இந்தியாவின் கடல்சார் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றது.

சிவ்சங்கர் மேனன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது போல பாக்குநீரினையின் 40 கடல் மைலுக்குள் காணப்படும் விமானந்தாங்கி கப்பலாக ஸ்ரீலங்கா காணப்படக்கூடாது.

இந்தியாவின் மூலோபாய கரிசனைக்குரிய நாடாக விளங்கக்கூடாது என்பதை நாங்கள் கண்டிப்பாக மனதில் வைத்திருக்கவேண்டும், ஜனாதிபதி இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார்.

இந்தியாவின் மூலோபாய பாதுகாப்பு தேவைகள் அபிலாசைகள் குறித்து மிகவும் அவதானமாகயிருக்கவேண்டும், இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகளுக்கு எங்கள் கடற்பரப்பினை பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது.

பாதுகாப்பு விடயத்தில் நாங்கள் இந்தியாவுடன சிறந்த உறவை கொண்டுள்ள அதேவேளை பல நாடுகள் ஸ்ரீலங்காவுடன் இராணுவஉறவை ஏற்படுத்திக்கொள்வதில் விருப்பமாக உள்ளதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

எனினும் நாங்கள் ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் பாதுகாப்பு உறவுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.