மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாள்! தவற விட்டுவிட வேண்டாம் - புண்ணியம் தரும் சிறப்பு

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாள்! தவற விட்டுவிட வேண்டாம் - புண்ணியம் தரும் சிறப்பு

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புண்ணியம் தரும் என அழைக்கப்படுகிறது. நாளைய தினம் அமாவாசைகளில் முதன்மையானதாக இருக்கும் அமாவாசையான மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு உகந்ததாகவும், அவர்களின் அருளையும், ஆசிர்வாதத்தை பெற உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அமாவாசை நாளில் இறந்து போன நம் முன்னோர்களுக்கு செய்யும் கடன்களை நீத்தார் கடன், பித்ரு கடன், சிரார்த்தம் என அழைப்பார்கள். அதிலும் மகாளய பட்சமாக கணக்கிடப்படும் இந்த அமாவாசையின் 15 நாட்களுக்கு முன்பிருந்தே இறந்து போன நம்முன்னோர்கள் எமதர்மனின் அனுமதியுடன் நம்மை காணவருவதாக ஐதீகம்...

நாளைய தினம் செப்டம்பர் 17 ம் நாள் வியாழக்கிழமை மகாளய அமாவாசை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் புரட்டாசி மாத பிறப்பில் இடம் பெறுவது சிறப்பு.

முன்னோர்களை நாம் சரியான முறையில் நினைத்து வழிபட்டு வந்தால், குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது, மன அமைதிக்கு வழிவகுக்கும், சுப விசேஷங்கள் நடைபெறும்.

முன்னோர்களின் சாபங்கள் நீங்க, வம்சம் விருத்தி அடைய இதுபோல அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், ஏழை எளியோர்க்கு அன்னதான செய்தலும் நன்மை பயக்கும்.