
மகாராஷ்டிராவில் மேலும் 247 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 247 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,003 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 16,071 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,728 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.