பிறந்த அன்றே சிசுவைப் புதைத்த இளம்தாய்: தீவிர விசாரணையில் பொலிஸார்!

பிறந்த அன்றே சிசுவைப் புதைத்த இளம்தாய்: தீவிர விசாரணையில் பொலிஸார்!

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜனபதய கொலனிப்பகுதியில் பிறந்து ஒரே நாளிலான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குழந்தை பிரசவித்த பெண்ணை அம்புலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தையை பிரசவித்தவர் திருமணமாகாத 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மீட்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.