ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான தகவல்..!

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான தகவல்..!

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரும்வரை தினமும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஜூன் 14 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தினம்தோறும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.